Posts

Showing posts from January, 2021

அத்தியாயம் 7

Image
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சம்யுக்தாவுடன் நின்று கொண்டிருந்தாள் மித்ரவிந்தா. சம்யுக்தா தனது சொந்த ஊருக்குச் செல்ல மித்ரவிந்தா அவளை வழியனுப்ப வந்திருந்தாள். "ஸ்டடி ஹாலிடேனு ஊருக்கு கிளம்பினது ஓகே. ஆனா எக்சாமுக்குக் கொஞ்சமாவது படி சம்யூ. ஆண்ட்டி அங்கிளை நான் ரொம்ப விசாரிச்சேனு சொல்லு" "நான் ஊருக்குப் போனதும் செய்ற முதல் வேலையே இந்த  புக்கை எல்லாம் தலைய சுத்தி வீசுறது தான்" என்று கிண்டலாக சொல்லி  அவளிடம் அடி வாங்கிக் கொண்டாள் சம்யுக்தா. பேருந்து கிளம்பத் தயாராகவும் அவள் அதில் ஏறிக்கொள்ள அவளுக்கு கையசைத்துவிட்டு கிளம்பினாள் மித்ரவிந்தா. அங்கிருந்து அவளது வீடு இருக்கும் பகுதிக்கு வந்து சேருவதற்குள் அவள் ஓய்ந்து போனாள் எனலாம். பெருநகரத்தின் போக்குவரத்து நெரிசலின் உபயம் தான். அவர்களின் தெருமுனைக்கு வந்த போதே யாரோ கண்காணிப்பது போல தோன்ற மனதின் உறுத்தலை ஓரங்கட்டியபடி வீட்டின் கேட்டை மூடியவள் படியேறி கதவைத் திறக்க முயன்ற நேரம் "ஹாய் ஹனி" என்ற காந்தக்குரல் காதில் விழ கதவில் வைத்த கை வைத்தபடி இருக்க நிச்சயம் அவனாக இருக்காது, இது என்னவோ பிரம்மை என்று எண்ணியபடி மீண்

அத்தியாயம் 6

Image
  இரவின் கனவுகள் கொடுத்த முகச்சிவப்புடன் எழுந்து அமர்ந்தாள் மித்ரவிந்தா. அவளருகில் படுத்திருந்த சம்யுக்தா எப்போதோ எழுந்துவிட்டாள் என்பதை சமையலறையில் விசிலடிக்கும் பால் குக்கரின் சத்தம் அவளுக்கு உணர்த்திவிட்டது. மித்ரவிந்தா படுக்கையிலேயே அமர்ந்துவிட்டவள் கண் மூடி நேற்றைய சம்பவங்களை மீண்டும் ஒரு முறை யோசிக்க ஆரம்பித்தாள். அவள் கண் முன்னே முகுந்தின் ஆளுமை  நிறைந்த முகம் வரவும் அவளறியாமல் நாணம் வந்து முகத்தில் ஒட்டிக்கொண்டது. எவ்வளவு இயல்பாக தனது கரத்தை வருடினான். தனது காதுகளில் முணுமுணுத்தது, இடையோடு சேர்த்து அணைத்தது, அடுத்த முறை கன்னத்தில் தான் என முன்னறிவிப்பு செய்தது என ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திப் பார்த்துவிட்டு தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். இக்கால இளைஞிகளுக்கே உரித்தான காலையில் எழுந்ததும் போன் முகத்தில் விழிக்கும் பழக்கத்திற்கு மித்ரவிந்தாவும் விதிவிலக்கு அல்லவே. போனை எடுத்தவளின் மனதை ஏற்கெனவே தன் வசப்படுத்தியிருந்த முகுந்தின் பெயரை கூகுள் தேடுபொறியில் போட்டு பார்க்க அவனைப் பற்றிய தகவல்களுடன் சிற்சிற போட்டோக்களையும் கூகுள் கடை பரப்பியது. அவன் நீலநிற ஜெர்சியில் அணி வீரர்களுடன் நி

அத்தியாயம் 5

Image
  சொர்க்கலோகமோ என கண்டவர் மயங்கும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த திருமண மண்டபம். மணமகன் பிசிசிஐயின் முக்கிய அதிகாரியான விஷ்ணுவர்தன் என்பதால் அந்த வட்டாரத்திலிருந்து முக்கிய நபர்கள் வருகை தந்திருந்தனர். அத்துடன் மணமகள் நிஹாரிகாவின் கல்லூரித்தோழிகள் தோழர்களும் வருகை தர அந்த மண்டபம் உற்சாகக்குரல் ஒலிக்க இரு பக்கத்து உறவினர்களின் வருகையாலும் நிறைந்திருந்தது. மணமகளும் மணமகனும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பக்கத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.  மணமேடையில் மணமக்களுக்கு பின்னே நின்ற மித்ரவிந்தாவும் சம்யுக்தாவும் மணமேடை அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். திருப்பதி ஏழுமலையானும் பத்மாவதி தாயாரும் பின்னணியில் சிலாரூபமாக நிற்க மணமேடையின் முற்பக்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணமேடை முழுவதும் பொன்னால் செய்யப்பட்டது போல விளக்குவெளிச்சத்தில் மின்ன அதில் அமர்ந்திருந்த மணமக்கள் பொற்சிலைகளாக மின்னினர். அச்சமயத்தில் கிரிக்கெட் போர்டின் முக்கிய அதிகாரிகள் வர அவர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய இளம் வீரர்களும் வருகை த