Posts

Showing posts with the label என் அருகில் நீ இருந்தால்

அத்தியாயம் 6

Image
  அத்தியாயம் 6 மருத்துவமனையில் இமயவரம்பனை அனுமதித்த புகழ்வேந்தனின் ஆட்கள் அவனை அங்கிருந்து கண்காணித்துக்கொண்டனர். அவனுக்கு நினைவு திரும்பியதும் தனக்கு தெரிவிக்குமாறு கட்டளை போட்டிருந்தான் புகழ்வேந்தன். சரியாக ஐந்து மணி நேரங்கள் கழித்து அவனுக்குச் சுயநினைவு வரவும் உடனடியாக புகழ்வேந்தனுக்குத் தகவல் பகிரப்பட புயல்வேகத்தில் மருத்துவமனைக்கு வந்தவன் இமயவரம்பனிடம் ஏன் ஆழினியைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்றாய் என வினவினான். இமயவரம்பன் வாயைத் திறப்பேனா என சாதிக்கவும் அருகில் கிடந்த ட்ரேயில் இருந்து சர்ஜிக்கல் நைஃபை எடுத்து அவன் கழுத்தில் வைத்தான் புகழ்வேந்தன். கழுத்து நரம்புகள் புடைக்க “ஏன் ஆழினிய ஹோட்டலுக்கு வர சொன்ன? உண்மைய சொல்றியா? உன் கழுத்தை ஒரே சீவா சீவிட்டுப் போகவா?” என்று கர்ஜிக்க, அவனோ “வேண்டாம். நான் சொல்றேன் நான் சொல்றேன்” என அலறினான். அதற்குள் உள்ளே வந்த நர்ஸ் “யார் சார்  நீங்க? பேசண்டை ஏன் டிஸ்டர்ப் பண்றிங்க?” என்க, புகழ்வேந்தனோ சர்ஜிக்கல் நைஃபை அவரை நோக்கி காட்டி “அரைமணிநேரம் எங்களை டிஸ்டர்ப் செய்யாம வெளிய போங்க சிஸ்டர். இல்லனா இவன் நிலமை உங்களுக்கு வரலாம்” என்க, அவர...

16 (இனி எல்லாம் வசந்தமே)

Image
  சில நாட்களுக்குப் பிறகு கொடப்பகொண்டா கிராமம் வழக்கமான கலகலப்புடன் சர்வலோகேஸ்வரய்யாவின் இல்லத்தில் அந்த காலைப்பொழுது ரம்மியமான பறவைகளின் சத்தங்களோடும் , கோசாலையில் இருக்கும் பசுக்களின் ' ம்மா ' என்ற குரல்களோடும் இனிதே புலர்ந்தது .  வீட்டின் பணியாளர்கள் பெரிய முற்றத்தைக் கோலத்தால் அலங்கரித்திருந்தனர் . மறுநாள் ராமநவமி என்பதால் சர்வலோகேஸ்வரய்யா தனது குடும்பத்துடன் பத்ராச்சலம் செல்வது வழக்கம் . அவர்களின் குடும்பத்துக்கு அந்தக் கோயிலில் சிறப்பான உரிமையும் உண்டு . ராமநவமியின் கோலாகலம் அந்த மாளிகையிலும் ஆரம்பித்திருந்தது . பூஜையறையில் இருந்து கேட்ட உமாதேவி பாடிய இராமகானம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது . ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா ? ஓ ராமா நீ நாமம் எந்த ருசிரா ? மதுரசமுல கண்டெ ததி க்ருதமுல கண்டெ அதிகமொ நீ நாமம் ஏமி ருசிரா ? த்ராக்ஷாரசமுல கன்ன இக்ஷு ரசமுல கன்ன பக்ஷி வாஹன ! நீ நாமம் ஏமி ருசிரா ? அஞ்சனதனய ஹ்ருத் கஞ்ச தளமுலண்டு ரஞ்சிலு நீ நாமம் ஏமி ருசிரா ? சதா சிவுடு மடி சதா பஜ...

15 (உன் பாதி நானடா)

Image
காதல் என்பது சிலருக்கு இனிய கனவு போல நினைத்தாலே தித்திக்கச் செய்யும் அழகான சம்பவங்களுடன் அவர்களின் வாழ்க்கைக்குள் நுழையும் . சிலருக்கோ அது ஒரு அதிரடி விபத்தாக தினமொரு மோதலும் பொழுதொரு வாக்குவாதமுமாக அனல் பறக்கும் நிகழ்வுகளோடு ஆரம்பிக்கும் . சஹானாவும் சர்வேஸ்வரும் இதில் இரண்டாம் ரகம் . அவனது கர்வமும் அவளது பிடிவாதமும் இருவரையும் திருமணத்துக்குப் பின்னரும் இணைகோடுகளாகப் பிரித்திருக்க அந்த பிரிவை நீக்கும் கருவியாக அமைந்தது சர்வேஸ்வர் சஹானாவின் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான காதல் மட்டுமே ! அந்த காதலால் தான் சர்வேஸ்வர் மீதிருந்த வெறுப்பையும் தாண்டி அவனது அருகாமையில் சஹானா மெய்மறந்து போனாள் . அந்தக் காதலால் தான் அவள் மீது இருந்த சினம் எல்லாம் அவனுக்கு கற்பூரம் போல காற்றில் கரைந்து மாயமானது . பெரும் சமுத்திரத்தையொத்த அந்தக் காதலுக்கு முன்னே சஹானாவின் பிடிவாதமும் , சர்வேஸ்வரின் கர்வமும் சிதைந்து ஒன்றுமில்லாது போய்விட்டது . அந்த ஒரு இரவில் ஆரம்பித்த அவர்களின் இல்லறம் வரும் இரவுகளிலும் காதலுடன் ...