அத்தியாயம் 7 புகழ்வேந்தனோடு நின்ற ஆழினியை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்றார் பர்வதம். எங்கே மகன் தனியொருவனாக நின்றுவிடுவானோ என்று இத்தனை ஆண்டுகள் இருந்த மனவுளைச்சல் அகன்று சூரியனைப் போல பிரகாசித்தது அவரது முகம். குமுதினிக்கோ அண்ணி வந்த சந்தோசம். ஆழினியை பூஜாரூமுக்கு அழைத்து சென்று பர்வதம் விளக்கேற்ற சொல்ல துணையாய் அவளும் சென்றாள். குத்துவிளக்கின் பிரகாசம் போல புகழ்வேந்தனின் வாழ்க்கையும் பிரகாசிக்கவேண்டும் என்று பூஜாரூமின் உள்ளே இருந்த முருகனின் திருவுருவப்படத்திடம் வேண்டிக்கொண்டார் பர்வதம். கரம் கூப்பி கண் மூடி நின்ற ஆழினியோ எப்படியாவது இந்த ராட்சசனிடமிருந்து என்னை காப்பாற்று இறைவா என்று மனமுருகி வேண்டினாள். அவளுக்கு இனி ரட்சகனாய் வரப்போவதே இந்த ராட்சசன் தான் என்பதை பேதை எப்போது அறிவாளோ? விளக்கேற்றியபிறகு பால் பழம் கொடுத்துவிட்டு இன்னும் சடங்கு சம்பிரதாயம் என்று பரபரத்த அன்னையை பார்வையால் அடக்கினான் புகழ்வேந்தன். “எல்லாம் சம்பிரதாயத்தையும் செய்திடனும்னு நான் ஆசைப்படக்கூடாதா புகழ்? அப்பா போட்டோவை ஆழினியோட சேர்ந்து கும்பிட்டுக்கப்பா” என்று அவர் ஆதங்கப்பட, குமுதினியோ “இன்னும் பால்ல
ஆரம்பம் அமர்க்களம்
ReplyDeletethank you sago
Deleteஎன்னை tag பண்ணுங்கள் ப்ளீஸ்
ReplyDeletefacebookil request kudunga sagi. na accept seyyuren. appa thaan tag seyya mudigirathu
Delete